லாரிகளை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினர் - அட்வைஸ் செய்த போலீசார்

குமரியில் கனிம வளம் கடத்துவதாக லாரிகளை சிறைபிடித்த நாம் தமிழர் கட்சியினருக்கு போலீசார் அட்வைஸ் செய்து லாரிகளை அனுப்பி வைத்தனர்.

Update: 2022-04-09 12:30 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞம் பகுதியில் அமைக்கப்படும் துறைமுக கட்டுமான பணிகளுக்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது. அனுமதி பெற்று அனுப்பப்படுவதை விட அனுமதி இன்றி 3 மடங்கு கனிம வளங்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கற்களைக் கொண்டு செல்ல நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நாகர்கோவில் வழியாக கற்களை ஏற்றிச் சென்ற லாரிகளை நாம் தமிழர் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர். இதனால் லாரி ஓட்டுநர்களுக்கு நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது, இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சட்டத்தை நீங்களே கையில் எடுக்க வேண்டாம் என கூறி நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர். மேலும் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சியினருக்கு அறிவுரை வழங்கி அவர்களை கலைந்து செல்ல வைத்தது லாரிகளை பாதுகாப்பாக கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News