கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 இடங்களில் தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்திக் கொண்டனர்.;

Update: 2021-07-28 03:30 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில்  27 இடங்களில் தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த பொதுமக்கள். (பைல் படம்)

  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பு முகாம்கள் 18 முதல் 44 வயதினருக்கும் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆன்லைன் முறையிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடி டோக்கன் முறையிலும், செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜக்கமங்கலம் துறை, குருந்தன்கோடு, கிள்ளியூர், ஆறுதேசம், இடைக்கோடு, குட்டக்குளி, கோதநல்லூர் ஆகிய 9 வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெறுகின்றன.

இதேபோன்று வெளிநாடு செல்வோருக்கு இரண்டாம் டோஸ் மட்டும் குழித்துறை அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்டது.

மேலும் நேரடி டோக்கன் முறையில் 18 முதல் 44 வயதினர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என்று நான்கு பிரிவுகளாக பூதப்பாண்டி, குளச்சல், சேனம்விளை, கன்னியாகுமரி, அருமனை, உட்பட 17 இடங்களில் நடைபெற்றது.

வயது வாரியாக பிரிக்கப்பட்டு 27 இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் ஏராளமானோர் பயன்பெற்றனர். 

Tags:    

Similar News