நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் :எளிய முறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில் மாநகராட்சியின் முகாம் மூலம் எளிய முறையில் தடுப்பூசி கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-19 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று ஐந்து இடங்களில் மாநகராட்சி சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெளிநாடு செல்பவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  இந்த சிறப்பு முகாம்கள் மற்றும் எளிய முறையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்   பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News