சூறைக்காற்றுடன் கனமழை: சீற்றத்தால் கடலுக்கு செல்வதை தவிர்த்த மீனவர்கள்

குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக தொழிலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்தனர்.

Update: 2021-09-27 14:30 GMT

சீற்றத்தால், கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

தமிழகத்தில்,  தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் அதன் ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் கேரளா லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியுலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில்,  நேற்று மாலை முதல்,  சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கடற்கரை பகுதியான குளச்சல், முட்டம், மண்டைக்காடு, சுற்றுவட்டார கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததோடு,  கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் குளச்சல், முட்டம், மண்டைக்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம், மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News