அந்தியூர் நகர அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

அந்தியூரில் மகளிர் தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

Update: 2023-03-08 12:15 GMT

அந்தியூரில் நகர அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உலக மகளிர் தினம் இன்று  (மார்ச்.08) புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வி குருராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய அதிமுக கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மகளிர்க்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.

இந்த நிகழ்வின் போது, அந்தியூர் நகர் செயலாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சண்முகானந்தம், ஹோட்டல் கிருஷ்ணன் ரமேஷ், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன்குமார், வர்த்தக அணி இணை செயலாளர் ராஜா சம்பத், அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க செயலாளர் மணிகண்ட பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News