அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-06-11 22:15 GMT

Erode news- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் (மாதிரி படம்)

Erode news, Erode news today- அந்தியூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூடுமைனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ராஜாமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் வேலை செய்யும் 35 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசுவதும், சைகை செய்வதுமாக இருந்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமான தகவல்களையும் அனுப்பியும், செல்போனில் தொடர்பு கொண்டும் பேசியும் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாலிய வள மைய மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பள்ளியில் இருந்த அந்த பெண்ணுக்கு ராஜாமணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண்ணின் கணவர், இதுகுறித்து தலைமையாசிரியர் ராஜமணியிடம் கேட்டு உள்ளார். அதற்கு, ராஜாமணி அந்த பெண்ணின் கணவரை சாதி பெயரை கூறி திட்டியதுடன்,  இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் ராஜாமணி மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News