கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-11 06:45 GMT

பைல் படம்.

Erode News, Erode Today News - கோபி அருகே பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் சஞ்சீவ் காந்தி வீதியைச் சேர்ந்தவர் வடிவு (எ) சண்முகவடிவு (வயது 60). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், போலீசார் சண்முகவடிவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு கோபியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை சண்முகவடிவு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீசார் சண்முகவடிவை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த 21 வயது பெண்ணையும் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், கோபி பகுதியில் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News