பவானியில் குடும்ப சண்டையை தடுக்க முயன்ற மனைவியின் தங்கை குத்திக்கொலை

Erode news- ஈரோடு மாவட்டம் பவானியில் குடும்ப சண்டையை தடுக்க முயன்ற மனைவியின் தங்கை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-07-01 00:45 GMT

Erode news- பவானி அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள். (உள்படம்) கொலையான கல்பனா (கோப்பு படம்)

Erode news, Erode news today- பவானியில் குடும்ப சண்டையை தடுக்க முயன்ற மனைவியின் தங்கை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி மேற்குத்தெரு முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (வயது 55). கட்டிட வேலைக்குச் சென்று வருகிறார். அதே பகுதியில் ஜோதிமணியின் தங்கை கல்பனா (வயது 36), கணவர் தனபாலுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று குடிபோதையில் வந்த கலைச்செல்வனுக்கும், ஜோதிமணிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை கலைச்செல்வன் கடுமையாக தாக்கியுள்ளார். இத்தகவலறிந்த கல்பனா அங்கு சென்று சண்டையை விலக்கி விட முயன்றார். அப்போது, கலைச்செல்வன் கையில் கிடைத்த கத்தரிக்கோலால் கல்பனாவை குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மனைவி ஜோதிமணியையும் அவர் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், ஜோதிமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஜோதிமணியை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்த உறவினர்கள் கலைச்செல்வனை தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். இது குறித்து பவானி போலீசார் கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News