'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: கோபியில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

Erode news- உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-01 07:30 GMT

Erode news- கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

Erode news, Erode news today- 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடித்திடவும் மற்றும் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து , பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் சுதாகர் (சத்தியமங்கலம்), கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷனி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அம்பிகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜ கோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) சோமசுந்தரம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் உத்திரசாமி உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News