சத்தி அருகே காசநோய் ஒழிப்பு, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள இண்டியம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (29ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-06-30 01:00 GMT

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் சுகாதார நலக்கல்வி குறித்து எடுத்துரைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம் இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுகொத்துக்காடு பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் பல்நோக்கு மருத்துவ முகாமில் காசநோய் ஒழிப்பு, புகையிலை, போதை பழக்க எதிர்ப்பு, பாதுகாப்பான குடிநீரின் அவசியம், டெங்கு தடுப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமிற்கு, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். இதில், காசநோய் பரவும் விதம், காச நோயின் வகைகள் அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், நுரையீரல் காச நோயின் ஆரம்ப அறிகுறிகள், காச நோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக கிடைக்கும் இடங்கள், காச நோயின் அதிகரிப்பால் ஏற்படும் மரண விகிதங்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல தீங்குகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சமுதாய சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, பாதுகாப்பான குடிநீரின் அவசியம் அதனால் தடுக்கப்படும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், ஓஆர்எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள், வயிற்றுப்போக்கு நோய்க்கான காரணிகள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி ஒழிப்பு வழிமுறைகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகளும் அதனால் தடைபடும் பெண் முன்னேற்றத்தின் சமுதாய சீர்கேடுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் குறைப் பிரசவங்கள், கருச்சிதைவுகள் ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், பிரசவ காலத்தில் ஏற்படும் தாய் சேய் மரணங்கள், பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, மரபணு வழியாக ஏற்படும் சிக்கிள் செல் இரத்த சோகை நோய்கள் அதற்கான ஆரம்ப நிலை கண்டுபிடிப்பு முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி, மருத்துவ அலுவலர்கள் மைக்கேல்ராஜ், தங்கமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் சாந்தி, பாலாஜி, சத்தி காசநோய் மைய முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கண்ணன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும், காசநோய் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டு வருகை புரிந்த பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News