பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.,24) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,082 கன அடியாக உள்ளது.;

Update: 2023-12-24 04:00 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,082 கன அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.

இதனிடையே, நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,514 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 2,082 ன அடியாக குறைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (டிச.24) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 83.34 அடி ,

நீர் இருப்பு - 17.52 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 2,082 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,500 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,700 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன‌ அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News