பவானிசாகர் அணையின் இன்றைய (டிச.15) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 84.09 அடியாக உள்ளது.

Update: 2023-12-15 03:45 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 84.09 அடியாக உள்ளது. 

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் அண்மையில் கன மழை பெய்து வந்தது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து. இதனிடையே, தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 1,000 கன‌ அடியாக குறைந்துள்ளது. 

வெள்ளிக்கிழமை (டிச.15) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 84.09 அடி ,

நீர் இருப்பு - 17.95 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,067 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,200 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,800 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி நீரும் , குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News