பவானிசாகர் அணையின் இன்றைய (ஆக.,14) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று (ஆகஸ்ட் 14) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது.;

Update: 2023-08-14 03:30 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது.

இன்று (ஆகஸ்ட் 14) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:- 

நீர் மட்டம் - 83.35 அடி ,

நீர் இருப்பு - 17.52 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 674 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 805 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 200 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News