கோபியில் 3ம் நாள் ஜமாபந்தி..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-06-25 13:00 GMT

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவலூர் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு 3ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று (25ம் தேதி) நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் ஜூன் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. 

அதன்படி, ஜமாபந்தி மூன்றாவது நாளான இன்று (25ம் தேதி) சிறுவலூர் உள்வட்டத்தைச் சேர்ந்த பொலவக்காளிபாளையம், நாதிபாளையம், நாகதேவம்பாளையம், கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், கடுக்காம்பாளையம், சந்திராபுரம் ஆகிய கிராம பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 232 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், பெறப்பட்ட மனுக்களின் மீது மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா, கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News