ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 455 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 455 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

Update: 2024-09-30 11:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்த போது எடுத்தப் படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (30ம் தேதி) நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 455 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (30ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கைகள் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 455 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருமஷ்ணசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News