ஈரோடு தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ஈரோடு அவல்பூந்துறை அருகே பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று (26ம் தேதி) கொண்டாடப்பட்டது.;
ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பைரவருக்கு தீபாராதனை வழிபாடு நடந்த போது எடுத்த படம்.
Erode Today News, Erode News - ஈரோடு அவல்பூந்துறை அருகே பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று (26ம் தேதி) கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி மாத முதல் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று (26ம் தேதி) நடந்தது.
இதையொட்டி, கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆண், பெண் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று தங்கள் கைகளாலேயே ஸ்வர்ண லிங்கத்துக்கும், பைரவருக்கும் பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. அதேபோல், 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.