அந்தியூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம்.பி. ஆறுதல்

பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில், காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம் பி.ஆறுதல் கூறினார்.

Update: 2022-09-09 11:30 GMT

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் சுப்பராயன் எம்.பி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் நேற்று மாலை அரசு மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் எம்.பி. கே சுப்பராயன் அந்தியூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்து, தரமான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது வடக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி பி குணசேகரன் பாலமுருகன் அந்தியூர் வட்ட செயலாளர் தேவராஜன் கனகராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News