அம்மாபேட்டையில் 10-ம் வகுப்பு தேர்வில் மகன் 3 பாடங்களில் தோல்வி: தந்தை தற்கொலை

அம்மாபேட்டை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் 3 பாடங்களில் தோல்வியடைந்ததால், தந்தை பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-07-06 09:30 GMT

அப்புசாமி.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மூத்த மகன் சஞ்சய் (15) மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார்.ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News