நாளை பொது விடுமுறை: ஈரோடு தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு

நாளை (ஏப்.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-18 06:47 GMT

தமிழ்நாடு மக்களவைப் பொதுத்தேர்தல் 2024.

Erode News , Erode Today News - நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்.19) வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்ரல் 19ம் தேதி) வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறும், பொது விடுமுறை வழங்காத தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள்/கடைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News