அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2022-02-24 04:45 GMT

ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட பட்டேபாளையத்தை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி பத்திரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென பிரசவலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவரது கணவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர்,ரகுவின் வீட்டிற்கு வாகனம் செல்ல முடியாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஸ்டச்சர் மூலம் சிறிது தூக்கி கொண்டு வந்தனர். 


இதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பத்திரிக்கு பிரசவலி அதிகரித்ததால் கொங்காடை கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி மருத்துவ உதவியாளர் சிவா என்பவர் பிரசவம் பார்த்துள்ளார். இதில் ரகு பத்திரி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் சேயும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர். 108ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து தாயும் சேயும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு மலை கிராம மக்கள் பாராட்டையும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News