ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-23 02:27 GMT

Erode news- நாளை மின்தடை (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட் -I, பூனாச்சி துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெருந்துறை அருகே உள்ள சிப்காட் -I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.

பவானி அருகே உள்ள பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஊஞ்சப்பாளையம், செல்லிக்கவுண்டனூர், மூணாஞ்சாவடி, முளியனூர், பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்புதோட்டம், தோப்புகாட்டூர், கொண்டையன்கொட்டாய், பெத்தகாபாளையம், ஒலகடம், எட்டிகுட்டைபாளையம், ஒட்டபாளையம், கே.கே.பாளையம், குங்குமப்பாளையம், வெடிக்காரன்பாளையம், கூச்சிகல்லூர், செம்படாபாளையம், தர்கா, குறிச்சி, பழனிவேல்புரம், குருவரெட்டியூர், அம்மாபேட்டை, பூசாரியூர், முகாசிப்புதூர், சமயதாரனூர், கெம்மியம்பட்டி, ஆனைக்கவுண்டனூர், பி.கே.புதூர், தண்ணீர்பந்தல் மற்றும் செம்முனிசாமி கோவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News