ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்

கணபதிபாளையம் மற்றும் பூனாச்சி ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும்

Update: 2023-06-12 04:30 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம் மற்றும் பவானி கோட்டத்துக்கு உட்பட்ட பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 13) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பஞ்சலிங்கபுரம், அரியங்காடு, காட்டுபாளையம், கீரிக்கல்காடு, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், கண்ணுடையாம்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், நஞ்சப்பகவுண்டன்புதூர், காங்கேயம்பாளையம். 

பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ்சாவடி, முளியனூர், பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News