கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியராக இரா.சரவணன் நேற்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2024-09-17 03:08 GMT

கோபி வட்டாட்சியராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுத்த படம்.

Erode Today News, Erode News, Erode Live Updates, - கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியராக இரா.சரவணன் நேற்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே புஞ்சைதுறையாம்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதில், குவாரி முறையான உரிமம் பெறாமல் செயல்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம்  செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பொது விநியோகத் திட்ட வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். 

இந்நிலையில், ஈரோட்டில் சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்த இரா.சரவணன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News