ஈரோட்டில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவு

கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

Update: 2024-09-25 14:00 GMT

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில், புதிதாக நியமிக்கப்பட்ட பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன ஆணையினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை அமைச்சர் முத்துசாமி இன்று (25ம் தேதி) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய, இத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கு மாவட்ட அறங்காவலர் நியமனம் குழு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களால் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி பொறுப்பேற்று, அறங்காவலர் குழு கூட்டம் 12 முறை நடைபெற்றது. இதில், 468 தீர்மானம் இயற்றப்பட்டு, 389 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கடைசியாக நடைபெற்ற 3 அறங்காவலர் குழு கூட்டத்தின் மூலம் 56 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25ம் தேதி) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார் உட்பட உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News