ஈரோட்டில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

Erode news- ஈரோடு மண்டலம் சார்பில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (12ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-09-12 10:00 GMT

Erode news- ஈரோடு மண்டலம் சார்பில் புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Erode news, Erode news today- ஈரோடு மண்டலம் சார்பில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (12ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (12ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் , அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

மாவட்டத்தில் கடந்த ஜூலை 17ம் தேதி 15 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) கோயம்புத்தூர் - மைசூர் (வழி:-சத்தி, திம்பம் சாம்ராஜ் நகர்) ஒரு பேருந்தும், ஈரோடு - கோயம்புத்தூர் பாயிண்டு -டு- பாயிண்ட் (ERO-100) 2 பேருந்துகள், கோயம்புத்தூர் - சேலம் பாயிண்டு -டு- பாயிண்ட 2 பேருந்துகள் என 5 பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


இதில், ஒரு பேருந்தின் விலை ரூ.44 லட்சம் என மொத்தம் ரூ.2.20 கோடி ஆகும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்திற்கு 2021-2024-ம் ஆண்டு வரை நகர்ப்புற பேருந்துகள் 9 பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 36ம் என மொத்தம் 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று 5 புதிய புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 30 புறநகர் பேருந்துகளும், 2 நகர பேருந்துகளும் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றப் பொலிவுடன் வழித் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் விடியல் பயணத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மண்டலத்தில் 304 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இதில், நாளொன்றிக்கு சுமார் 3 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் தற்போது வரை 3,302 லட்சம் மகளிர் கட்டணம் இல்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டம் கடந்த மார்ச் 14ம் தேதியன்று முதல் விரிவுபடுத்தப்பட்டு, தாளவாடி மலைப்பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் 1 புறநகர் பேருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளொன்றிக்கு சுமார் 431 மகளிர் வீதம் தற்போது வரை 77,084 மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என், ஈரோடு மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பி.கே.பழனிசாமி (1-ம் மண்டலம்), சுப்பிரமணியம் (2-ம் மண்டலம்), சசிகுமார் (3-ம் மண்டலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் தா.மோகன்குமார் (ஈரோடு மண்டலம்) உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News