நசியனூரில் ரூ.6.59 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

நசியனூரில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவுற்ற திட்டப் பணியினை திறந்தும் வைத்தார்.

Update: 2024-10-21 12:15 GMT

ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்.

நசியனூரில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவுற்ற திட்டப் பணியினை திறந்தும் வைத்தார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டியும், பெரியவிளாமலை ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்தும் வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நசியனூர் பேரூராட்சியில் பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும், சுஜில்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும் அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து, வணிக வரித்துறையின் சார்பில் பவானியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வரி அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கும், நசியனூர் பேரூராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெரியவிளாமலையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ், இணை ஆணையர் (மாநில வரி ஈரோடு கோட்டம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை ஆணையர் (மாநிலவரி, ஈரோடு) ரேணு .எஸ்.கமல், ஈரோடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிரகாஷ், உதவி இயக்குநர்கள் கணேசன் (பேரூராட்சி), உமாசங்கர் (ஊராட்சிகள்), நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், செயல் அலுவலர் கோவிந்தராஜா, பெரியவிளாமலை ஊராட்சி மன்றத்தலைவர் பூவிழி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News