கொடிவேரி அணை இன்று மூடல்: சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-10 02:45 GMT

கொடிவேரி அணை.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் கொடிவேரி அணை உள்ளிட்ட பகுதிகளில் திங்கட்கிழமை (நேற்று) இரவு 74.4 மி.மீ மழை மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது, அணையில் இருந்து வினாடிக்கு 1,302 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதையொட்டி, பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இன்று (அக்டோபர் 10) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News