ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி

Erode news- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 20 முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

Update: 2024-06-15 12:15 GMT

Erode news- ஜமாபந்தி (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 20 முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம். 

ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் 20ம் தேதி முதல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் 20ம் தேதி முதல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 20ம் தேதி அன்றும், (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே, பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News