ஈரோடு சூரியம்பாளையத்தில் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம்..!

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (22ம் தேதி) நடந்தது.

Update: 2024-10-22 09:15 GMT

ஈரோடு சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (22ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாநகராட்சியில் மூன்றாவது வார்டில் சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, மழைக்கால நோய்கள் மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கு உண்டான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, அயோடின் சத்து அதன் முக்கியத்துவம், அயோடின் கலந்த உப்பு சமையலில் பயன்படுத்த வேண்டியதின் அவசியம், அயோடின் சத்து குறைபாடுகளினால் கர்ப்பிணிப் பெண்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள், பள்ளிப்பருவத்தினர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள், அயோடின் சத்து குறைபாட்டை தடுக்க மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், மழைக்கால நோய்கள் மற்றும் அதன் பாதுகாப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மருத்துவ அலுவலர் சவீதா, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களில் காசநோய்க்கு உண்டான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News