பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 741 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (மே.31) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 982 கன அடியிலிருந்து 741 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2024-05-31 05:00 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (மே.31) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 982 கன அடியிலிருந்து 741 கன அடியாக குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்கள் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் பவானிசாகர் அணை சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ. தூரத்திலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறு, மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று (மே.30) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 982 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.31) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 741 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 54.24 அடியில் இருந்த நிலையில், இன்று காலை 54.56 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5.62 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News