பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,197 கன‌ அடியாக சரிவு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,821 கன அடியில் இருந்து 4,197 கன அடியாக சரிவடைந்து உள்ளது

Update: 2023-07-29 05:00 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,821 கன அடியில் இருந்து 4,197 கன அடியாக சரிவடைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி, உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட தாகும். அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக கடந்த வாரம் 78 அடியாக இருந்த அணை யின் நீர்மட்டம் தற்போது 83 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், வெள்ளிக்கிழமை (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி 5,821 கன அடியாக இருந்த நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) 4,197 கன அடியாக குறைந்துள்ளது. இன்று (ஜூலை 29) காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.56 அடியாகவும், நீர் இருப்பு 17.64 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News