பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,926 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-07-26 03:00 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. நேற்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,538 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,926 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 85.47 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 86.06 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 19.11 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News