ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-09-25 12:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25ம் தேதி) நடைபெற்றது .

மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தங்குதடையின்றி சென்றடையவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மாவட்ட வன அலுவலர்கள் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), சுதாகர் (ஆசனூர்), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்), துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News