கோபி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-10 05:30 GMT

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். ஸ்பின்னிங் மில் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஹரிபுவனேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடன் தொல்லையால் லோகநாதன் விஷம் குடித்தார். பின்னர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து, கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பத்மாவதி இன்று காலை விஷம் குடித்து மகனுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தற்போது, இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News