கோபியில் விஷ பூச்சி கடித்து வாலிபர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-23 09:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அயலூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 23) பனியன் கம்பெனி டெய்லர். அதே பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது விஷப்பூச்சி ஏதோ கடித்ததாக சத்தமிட்டார். அவரின் நண்பர்கள் தாகம் தணிக்க தண்ணீர் கொண்டு வருவதற்குள் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் நடராஜ் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News