கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை (12.11.2021) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-11-11 04:45 GMT

கோப்பு படம்

பராமரிப்பு பணிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கோபி:

கோபி துணை மின் நிலையத்தில் நாளை  (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பாரியூர். நஞ்சகவுண்டன்பாளையம், ஜீவா நகர், வெண்ணிலா நகர், கே.டி.எஸ்.நகர், நல்லம்மாள் நகர், அழகு நகர், முத்து நகர், பார்வதி நகர், பைரவர் நகர், அம்பிகை நகர், டி.ஆர்.ஆர் நகர் ஆகிய பகுதிகளில்,  நாளை காலை 10 மணி முதல்,  மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

கொளப்பலூர்:

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை  (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால்,  காவேரிபாளையம் செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், மேட்டுவலவு, மணியக் காரன்புதூர் மகாலட்சுமி நகர், கருக்குபாளையம், பாட்சா காட்டுப்புதூர், அழகு கவுண்டன்பாளையம், கல்லுமடை. நாகப்பகவுண்டன் புதூர், சாணார்பாளையம், நீலாம்பாளையம் பிரிவு, கிழக்கு தோட்டம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல்,  மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News