கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

கோபி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (4ந் தேதி) நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-03-03 09:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோபி பஸ் நிலையம், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன் பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி, உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News