கோபி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

Update: 2021-11-25 10:00 GMT

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கெட்டிச்செவியூர், வாகரைப்புதூர், பள்ளிபாளையம், காளியப்பபாளையம், ஆலாம்பாளையம், தோரணவாவி, ராசா கவுண்டன்பாளையம், தோட்டத்துப்பாளையம், சூரி யப்பம்பாளையம், நல்லி கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம் திருமநாதம்பாளையம், குட்டையபாளையம், சிறுவலூர், தாண்டாகவுண்டன்பாளையம், லட்சுமாய்புதூர், தண்ணீர்பந்தல்பாளையம், பூச்சநாய்க்கன்பாளையம், செரைகோவில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News