கோபிசெட்டிபாளையத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ மழை செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-11-23 01:30 GMT

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று காலை முதல், அதிகமான வெயில் இருந்தது. இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் 7.20 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோபி பஸ் நிலையம், மொடச்சூர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் தடைப்பட்டது. கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ வரை மழை பெய்ததாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News