கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்யில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்வேறு இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

Update: 2021-10-21 21:30 GMT

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் பல்வேறு இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளி, சனி (அக்டோபர் 22, 23) ஆகிய இரு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் ஜெ.பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - வாய்க்கால் சாலை, நகராட்சி நடுநிலைப் பள்ளி- மார்க்கெட் சாலை, டி.எஸ்.சாரதா நடுநிலைப் பள்ளி அக்ரஹாரம், ஜெயராம் நடுநிலைப் பள்ளி ஜெயராம் எக்ஸ்டென்ஷன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மொடச்சூர், வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளி -பச்சைமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கபிலர் வீதி, வைர விழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கச்சேரி வீதி, நகராட்சி துவக்கப் பள்ளி நாயக்கான்காடு, செங்கோடப்பா துவக்கப் பள்ளி - பாரியூர் சாலை. மேலும், கோபி அரசு மருத்துவமனையில் இரு தினங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags:    

Similar News