கோபி அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

மது அருந்த பணம் கேட்டு தாயை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-25 06:15 GMT

சிறுவலூர் காவல்நிலையம்.

கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் ராஜாமணி வயது 69 கூலி தொழிலாளி. இவரது மகன்களில் ஒருவர் ரமேஷ் வயது 30. இவர் மது குடிக்க நேற்று முன்தினம் இரவு பணம் கேட்டு ராஜாமணியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தர ராஜாமணி மறுக்கவே, இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின்படி, சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரமேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News