ஈராேடு அருகே நம்பியூரில் ஆடு திருடிய வாலிபர் கைது

நம்பியூரில் ஆட்டை திருடி பைக்கில் கொண்டு சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-02 11:00 GMT

நம்பியூர் அழகாபுரி நகரை சேர்ந்தவர் சக்திவேல் வயது 34. இவர் நம்பியூர்- புளியம்பட்டி ரோட்டில் உள்ள பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சிறிது நேரம் கழித்து ஆட்டை அறுத்து கொள்ளலாம் என தனது கடைக்கு பின்னால் ஆட்டை கட்டி வைத்துள்ளார். பின்னர் ஆட்டை அறுக்க கடைக்கு பின்னால் சென்று பார்த்தபோது ஆட்டை காணவில்லை.

உடனடியாக சக்திவேலும் அவரது நண்பர் குணசேகர் இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நம்பியூர் ஓம் சக்தி கோவில் வீதி வழியாக சென்ற போது ஒரு வாலிபர் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை முன்னாடி வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவரை துரத்தி பிடித்து பார்த்தபோது சக்திவேலுக்கு சொந்தமான ஆடு என தெரியவந்தது.

இது குறித்து சக்திவேல் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் அந்த வாலிபரிடம் விசாரித்தார். விசாரணையில் நம்பியூர் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த கவுதம் குமார் (19) என்பதும், ஆட்டை திருடியதும் தெரிய வந்தது. பின்னர் கவுதம்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News