ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-30 12:00 GMT

ஈரோட்டில், வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஜூலை 5-ந் தேதி வரை தேதி வரை,  தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், 36 -வது நாளான நேற்றும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 458 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 188 இருசக்கரவாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால்,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக அந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. எனினும், ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

Tags:    

Similar News