சுயவேலைவாய்ப்பு பயிற்சி: ஈரோட்டில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 03:30 GMT

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு வருகிற ஜூலை 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை 10 நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில், ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியின் போது, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு  உட்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவார்கள். மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தில் அவர்களின் இருப்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் பயிற்சி நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News