மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

Erode news- ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-26 11:15 GMT

Erode news- டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ.

Erode news, Erode news today- இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-ல் அடங்கிய உதவி ஆய்வாளர், வணிகவரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வன அலுவலர் உள்ளிட்ட 2,327 பணிக்காலியிடங்களுக்கான முதல்நிலை தேர்விற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 20ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு வரும் செப்டம்பர் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 19ம் தேதி ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 2ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-2, குரூப்-4, டிஎன்யுஎஸ்ஆர்பி, டெட் ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/VTRWijWVcgNBn57w5 என்ற லிங்க்கை கிளிக் செய்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார்எண், புகைப்படம் இரண்டு, ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு (ஐடிஐ அருகில், சென்னிமலை வழி) ஜூலை 2ம் தேதியன்று நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம். எனவே. ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News