ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்விற்கு வரும் 23ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

Update: 2024-10-17 12:00 GMT

ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்விற்கு வரும் 23ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (முதன்மைத் தேர்வு) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திரத்தேர்வுகள், இணையவழித்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, டிஎன்யுஎஸ்ஆர்பி, டெட் ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 கூகுள் ஃபார்ம் லிங்க்கில்  பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News