ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-21 19:15 GMT

வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம், ஈரோடு கோட்டம், ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு எதிர் வரும் 26ம் தேதி (புதன் கிழமை) அன்று காலை 11 மணிக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி முகாமில் விவசாய நிலங்களை நில அளவைத் துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முகாம் நடைபெற உள்ளது. எனவே, முகாமில் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறும் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News