போலி ரயில் டிரைவர் : காவலில் எடுக்க ரயில்வே போலீசார் சட்ட ஆலோசனை

கைது செய்யப்பட்ட போலி ரயில் டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க சட்ட ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-19 11:45 GMT

போலியாக ரயிலை இயக்கிய ௧௭ வைத்து சிறுவனை கைது செய்த போலீசார்.

மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 12ஆம் தேதி இரவு ஈரோடு ரயில் நிலையம் வந்தது. மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ரயில் என்ஜின் டிரைவர் உடையில் இருந்த மேற்கு வங்க மாநிலம் சாட்டை ஹரிராம்பூர் ஷர்துல் என்பவரின் 17 வயது மகன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்ராயில் ஷேக் (21) ஆகியோரை ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 17 வயது சிறுவன் இரண்டு வருடங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலை இயக்கி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த சிறுவன் தற்போது கோவை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் அந்த சிறுவனை காவலில் எடுப்பது விசாரிப்பதில் போலிசாராருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது . சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சட்டரீதியாக வாய்ப்பில்லை. ஆனால் அந்த சிறுவனை காவலில் எடுத்தால் மட்டுமே எத்தனை ஆண்டுகள் அவன் ரயிலை இயக்கி உள்ளான் என்பதும் எத்தனை நபர்களுக்கு பதிலாக போலியாக ரயிலை இயக்கியுள்ளான் என்பதும் தெரிய வரும் என்றும், போலியாக அங்கு எத்தனை பேர் ரயில் இயக்கி வருகின்றனர் என்பது போன்ற விவரங்களை கண்டறிய முடியும் என்றும் அவர்களுக்கு பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்து தெரிய வரும் போலீசார் தெரிவிக்கின்றனர். அதே சமயம் சிறுவனை காவலில் எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் சட்ட ரீதியாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News