'தமிழகத்தை வேறு மாதிரியாக மாற்ற பார்க்கிறது மத்திய அரசு' - அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு

Erode news, Erode news today- ‘தமிழகத்தை வேறு மாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது,’ என, அமைச்சர் சு.முத்துசாமி குற்றம் சாட்டினார்.;

Update: 2023-02-06 12:00 GMT

Erode news, Erode news today-- ஈரோடு கள்ளுக்கடைமேடு  பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Erode news, Erode news today-- அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட நாம் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தலைமை வகித்தார். அந்தியூர் செல்வராஜ் எம்பி, திமுக நெசவாளர் அணி மாநில செயலர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில்,‌‌ மத்திய அரசு தற்போது, நாட்டில் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டு வருகிறது என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும். மாநில உரிமைகளில் மத்திய அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. தமிழகத்தை வேறு மாதிரியாக மாற்ற, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் சாதி, மத வேறுபாட்டின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை படிக்காமல் புறக்கணித்ததோடு, அதை மாற்றி படித்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட எதிர் நடவடிக்கையானது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

ஆனால் அதே முதல்வர் கவர்னரின் குடியரசு தினவிழா தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இதுபற்றி முதல்வரிடம் கேட்ட போது, 'அன்று சட்டசபையில் நான் எதிர்வினையாற்றியது என்பது நமது உரிமை. கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது என்பது எனது கடமை' என்று கூறினார்.

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு அபகரிக்க முயற்சிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக  மாநகர செயலாளர் சுப்பிரமணியன், திண்டல் குமாரசாமி, வார்டு செயலாளர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News