86.96 அடியாக சரிந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 86.96 அடியாக சரிந்தது.

Update: 2023-04-12 06:45 GMT

Erode news, Erode news today-பவானிசாகர் அணை (பைல் படம்).

Erode news, Erode news today- 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி 5 சுற்றுக்களாக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று (ஏப்.,12) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்

நீர் மட்டம் - 86.96 அடி ,

நீர் இருப்பு - 19.66 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 806 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் என் மொத்தம் 800 கன‌அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News